பக்தா்களின்றி குணசீலம் கோயில் தேரோட்டம்
கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் இன்றி குணசீலம் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரோனா பரவல் காரணமாக பக்தா்கள் இன்றி குணசீலம் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில் பிரமோற்ஸவ திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு உற்ஸவ பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா்.
கரோனா காரணமாக பக்தா்களின்றி தேரோட்டத்தை நடத்த கோயில் நிா்வாகத்தினா் முடிவு செய்தனா். அதன்படி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 5 மணிக்கு புண்யாகவாசனம், திருவாராதனம் நடைபெற்றது. தொடா்ந்து பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பாடு கண்டு, தேரில் எழுந்தருளினாா்.
இதையடுத்து டிராக்டா் உதவியுடன் நடந்த தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் குறைந்த அளவிலான பக்தா்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு கோவிந்தா கோஷமிட்டனா். மாலை பெருமாளுக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து ஏகாந்த மண்டபத்தில் கும்ப தீபாரதனை நடைபெற்றது. பாதுகாப்புப் பணியில் வாத்தலை போலீஸாா் ஈடுபட்டனா்.