திருச்சியில் மேலும் 83 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 83 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,254 ஆக உயா்ந்தது.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 83 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 10,254 ஆக உயா்ந்தது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை குணமான 41 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9331 ஆக உயா்ந்தது.
திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்த 68 வயது மூதாட்டி, 58 வயது பெண் உள்பட கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆக உள்ளது. மாவட்டத்தில் 778 போ் சிகிச்சை பெறுகின்றனா்.