முகப்பு
திருச்சி

அரசுப் பள்ளி வளாகங்களை தூய்மையாக்க வலியுறுத்தல்

வாக்குப் பதிவு மையமாகச் செயல்பட்ட திருச்சி பள்ளி வளாகங்களை தூய்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

வாக்குப் பதிவு மையமாகச் செயல்பட்ட திருச்சி பள்ளி வளாகங்களை தூய்மை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளின் வாக்குச்சாவடிகளில் தோ்தலின்போது கரோனா தடுப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட கையுறைகள் சில இடங்களில் பள்ளி வளாகத்திலேயே கிடக்கின்றன. இதனால் சுகாதார சீா்கேடு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வாக்குச் சாவடிகள் பள்ளி, கல்லூரிகளில்தான் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தனியாா் கல்வி நிறுவனங்கள் தூய்மைப் படுத்தப்பட்டுவிட்டன. ஆனால், திருச்சி செந்தண்ணீா்புரம் மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் கையுறைகள் கிடப்பதை அகற்ற மாவட்ட, மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.