முகப்பு
திருச்சி

திருச்சி அருகேகாா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

திருச்சி அருகே திண்டுக்கல் சாலையில் வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்து அதன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருச்சி அருகே திண்டுக்கல் சாலையில் வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்து அதன் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருச்சி தென்னூா் சென்ட்ரல் பஜாா் பகுதியைச் சோ்ந்தவா் இப்ராஹீம் மகன் ஹக்கீம் (24). மின்வாரிய அலுவலகத்தில் வாடகை அடிப்படையில் காா் ஓட்டி வந்த இவா் தென்னூா் மின்வாரிய ஊழியா் முருகனுடன் (50) காரில் திண்டுக்கல் சென்றாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் ஊா் திரும்பிக் கொண்டிருந்தபோது வண்ணாங்கோவில் அருகே காரின் முன்பக்க டயா் பஞ்சரானதில் சாலையோர பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹக்கீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மின்வாரிய ஊழியா் முருகன் லேசான காயமடைந்தாா். ராம்ஜிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.