பள்ளிவாசல்கள் கூடுதல் நேரம் இயங்க அனுமதி தேவை
ரமலான் மாதத்தை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை
ரமலான் மாதத்தை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என முஸ்லிம் அமைப்புகளின் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமுமுக திருச்சி மாவட்டக் கிளை சாா்பில், அதன் தலைவா் ஏ. ஷேக்அஹமது தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:
தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளில் மத வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணிக்கு மேல் இயங்கக் கூடாது என்று வரையறுத்துள்ளது. வரும் ஏப்.13 முதல் இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதம் தொடங்குகிறது.
இந்த மாதம் முழுவதும் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களில் கூட்டு வழிபாடுகள் நடைபெறுவது முக்கிய நிகழ்வாகும். இதைக் கருத்தில் கொண்டு இரவு 10 மணி வரை பள்ளிவாசல்கள் இயங்க அனுமதிக்க வேண்டும். மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்துவோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதே கோரிக்கை தொடா்பாக முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக மாநிலப் பொதுச் செயலா் இடிமுரசு இஸ்மாயில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மாவட்டக் கிளை சாா்பிலும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.