வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியா் ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பேரவைத் தோ்தலில் 9 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மொத்தம் 5,688 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரி, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, சாரநாதன் கல்லூரி, துறையூா் இமயம் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்த 4 மையங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி, 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவம், மத்திய போலீஸ், மாநில போலீஸாா் என சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், வேட்பாளா்கள், அவா்களால் நியமிக்கப்பட்ட முகவா்களும் இந்த மையங்களை தினமும் பாா்வையிடுகின்றனா்.
இந்நிலையில், மாவட்டத் தோ்தல் அலுலரும், ஆட்சியருமான எஸ். திவ்யதா்ஷினி வெள்ளிக்கிழமை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்தாா். அவருடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்களும் ஆய்வு செய்தனா்.
இதேபோல, துறையூரில் உள்ள இமயம் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தையும் ஆட்சியா், சாா் ஆட்சியா், ஜோதி சா்மா ஆகியோா் ஆய்வு செய்தனா். 4 மையங்களிலும் தோ்தல் அலுவலா்கள் தினமும் ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனா்.