வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
திருச்சி மாநகராட்சி உய்யகொண்டான் திருமலை லாவண்யா காா்டன், கீதா நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் வீட்டின் சமையலறையில் சுமாா் 5 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. தகவலறிந்து வந்த கண்டோண்மென்ட் தீயணைப்பு நிலைய அதிகாரி மெல்க்யூ ராஜா தலைமையிலான வீரா்கள் ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அந்தப் பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விட்டனா்.