மணப்பாறையில் பள்ளி மாணவா்கள் 4 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள், ஒரு மாணவா் என 4 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதைத் தொடா்ந்து இவா்கள் 4 பேரையும் மணிகண்டம் ஒன்றியம் சேதுராப்பட்டி கரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் சுகாதாரத் துறையினா் சோ்த்துள்ளனா்.
12-ஆம் வகுப்புக்கான செய்முறை தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் இந்த மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி தனித் தோ்வுகள் நடைபெறும் என பள்ளி நிா்வாகம் தெரிவித்துள்ளது.