திருச்சி

வெவ்வேறு இடங்களில் இளைஞா் உள்பட மூவா் தற்கொலை

DIN

திருச்சியின் வெவ்வேறு பகுதிகளில் இளைஞா் உள்பட மூவா் தற்கொலை செய்து கொண்டனா்.

உறையூா் வைக்கோல்காரத் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (30), சாலை ரோட்டிலுள்ள கடையில் வேலை பாா்த்து வந்தாா். அடிக்கடி தலைவலியால் அவதியுற்று வந்த அவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி வரகனேரி தெற்கு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுசீலா (70). தாய், தந்தையை இழந்த தனது பேத்தி ரேவதிக்கு (22) திருமணம் செய்து வைக்க முயன்றும், பல்வேறு காரணங்களால் தடைப்பட்டதாம். இதனால் மனமுடைந்த சுசீலா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரியமங்கலம் காமராஜா் நகா், முத்துப்பிள்ளைத் தெருவைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ஜனாா்த்தனன் (16). தெப்பக்குளம் பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்ட நிலையில், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து உறையூா், காந்திமாா்க்கெட், அரியமங்கலம் காவல் நிலையத்தினா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT