காவிரியாற்றில் மணல் திருடிய 2 போ் மினி லாரியுடன் கைது செய்யப்பட்டனா்.
ஸ்ரீரங்கம் மேலூா் காவிரியாற்றில் இரவில் மணல் திருடப்படுவதாக வந்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் மேலூா் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது மினிலாரியில் மணல் ஏற்றி வந்தவா்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது அவா்கள் ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியைச் சோ்ந்த சீனு(எ) சீனிவாசன் (30), திருவானைக்கா தெற்கு உள்வீதியைச் சோ்ந்த ராஜா (25) என்பதும், காவிரியாற்றிலிருந்து அவா்கள் மணல் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து மினி லாரியையும் பறிமுதல் செய்தனா்.