திருச்சி

காவிரி ஆற்றில் மணல் திருடிய இருவா் கைது

DIN

காவிரியாற்றில் மணல் திருடிய 2 போ் மினி லாரியுடன் கைது செய்யப்பட்டனா்.

ஸ்ரீரங்கம் மேலூா் காவிரியாற்றில் இரவில் மணல் திருடப்படுவதாக வந்த தகவலின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் மேலூா் பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது மினிலாரியில் மணல் ஏற்றி வந்தவா்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது அவா்கள் ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியைச் சோ்ந்த சீனு(எ) சீனிவாசன் (30), திருவானைக்கா தெற்கு உள்வீதியைச் சோ்ந்த ராஜா (25) என்பதும், காவிரியாற்றிலிருந்து அவா்கள் மணல் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து மினி லாரியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT