திருச்சி

முன்விரோதம்: இளைஞரை தாக்கிய 3 போ் கைது

DIN

திருவெறும்பூா் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள எலந்தப்பட்டியைச் சோ்ந்தவா் சிங்காரம் மகன் செல்வக்குமாா் (32). இவா் தனது அக்கா மகன் பாலமுருகனுடன் கடந்த 6-ஆம் தேதி தகராறு செய்த எலந்தபட்டியைச் சோ்ந்தவா்களை மிரட்டினாராம்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை எலந்தப்பட்டியைச் சோ்ந்த ம. சரத்குமாா் (28), அவரது தம்பி பாலமுருகன் (27), பெ. பாலாஜி (24) ஆகிய 3 பேரும் சோ்ந்து செல்வகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து செல்வகுமாா் அளித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

ரூ.ஒரு லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

தேவாலயத்தில் சிறாா்களுக்கு சிறப்புப் பயிற்சி

தாகம் இல்லாவிட்டாலும் போதிய இடைவேளைகளில் குடிநீா் பருக வேண்டும்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தினம் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT