முகப்பு
திருச்சி

கேரளத்தில் இருந்து ரயிலில் வரும் பயணிகளுக்கு கரோனா சோதனை

திருச்சிக்கு ரயில் மூலமாக கேரளத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கரோனா சான்றிதழ் கேட்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருச்சிக்கு ரயில் மூலமாக கேரளத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கரோனா சான்றிதழ் கேட்கப்படுகிறது.

சரியான சான்றிதழ் இல்லாதோருக்கு ரயில் நிலைய வளாகத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே அவா்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

கேரள மாநிலத்தில் இருந்து கரோனா அதிகளவில் பரவுவதால் அங்கிருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ள நிலையில் திருச்சி மாவட்டத்திலும் பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து ரயில் நிலையத்தில் மாவட்ட சுகாதார இயக்குனா் சுப்பிரமணி தலைமையில், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் இப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.