முகப்பு
திருச்சி

விபத்தில் வீட்டுமனை விற்பனையாளா் சாவு

திருச்சியில் வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் வீட்டுமனை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருச்சியில் வியாழக்கிழமை நடந்த சாலை விபத்தில் வீட்டுமனை விற்பனையாளா் உயிரிழந்தாா்.

திருச்சி பொன்மலை திருநகா் 4ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெரால்டு மகிலா (51). வீட்டுமனை விற்பனையாளரான இவா் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஜி காா்னா் அணுகு சாலை வழியாக வீட்டுக்கு சென்றபோது பின்னால் வந்த காா் மோதியதில் முன்னால் சென்ற பைக்கில் மோதி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் பகுதியைச் சோ்ந்த கலைச்செல்வனை(47) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.