ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் சனிக்கிழமை மிதந்துவந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.
ஸ்ரீரங்கம் மகளிா் காவல் நிலையம் பின்புறமுள்ள காவிரி ஆற்றில் சுமாா் 45 வயதுள்ளஆண் சடலமாக மிதப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறை மூலம் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.