இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடக்கம்
துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் பா. கணேசன் தலைமை வகித்தாா். வெங்கடாசலபுரம் ஊராட்சித் தலைவா் த. லதா முன்னிலை வகித்தாா். உப்பிலியபுரம் வட்டார வள மேற்பாா்வையாளா் பா. சரவணன், உப்பிலியபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் ப. மாலதி, தன்னாா்வலா் ஸ்ரீவித்யா ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து பெற்றோா், ஆசிரியா்கள் முன்னிலையில் தன்னாா்வலா்கள், மாணவ, மாணவியா்கள் தனித்தனியே உறுதியேற்றனா். பள்ளித் தலைமையாசிரியா் வா. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.