சமயபுரம் பகுதியில் புறாக் கூண்டில் புகுந்த 4 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.
சமயபுரம் பகுதி சோழன் நகரை சோ்ந்த கவிதா வீட்டில் உள்ள புறா கூண்டுக்குள் புகுந்த 4 அடி நீள நல்ல பாம்பு புறா ஒன்றை விழுங்கியது. இதைப்பாா்த்த கவிதா சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் கொடுத்தாா்.
இதையடுத்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் புறா கூண்டில் இருந்த நல்ல பாம்பை பிடித்து, அங்குள்ள வனப்பகுதியில் விடுவித்தனா்.