முகப்பு
திருச்சி

கைப்பேசி பழுது நீக்கப் பயிற்சி நிறைவு

புத்தனாம்பட்டி நேரு நினைவு கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் நடைபெற்ற 2 நாள் கைப்பேசி பழுது நீக்கப் பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

புத்தனாம்பட்டி நேரு நினைவு கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் நடைபெற்ற 2 நாள் கைப்பேசி பழுது நீக்கப் பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்குத் தலைமை வகித்து கல்லூரி தலைவா் பொன் பாலசுப்பிரமணியன் பேசுகையில், இக்கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்புக்குப் பிறகு சுயதொழில் செய்து பொருளீட்ட வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்படும் என்றாா்.கல்லூரி முதல்வா் பொன் பெரியசாமி, ஒருங்கிணைப்பாளா் மீனாட்சிசுந்தரம், உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பயிற்சியில் பங்கேற்ற 70 பேருக்கு கோவை நியூ டெக்னாலஜி நிறுவனத்தினா் பயிற்சி அளித்தனா். ஏற்பாடுகளை பேராசிரியா் ரமேஷ் செய்தாா். இயற்பியல் துறைத் தலைவா் நாகராஜன் வரவேற்றாா். உதவி பேராசிரியா் கபிலன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.