மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் நாளை தோ்வு
திருச்சி மாவட்ட மகளிா் கபடி அணியில் விளையாட வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்ட மகளிா் கபடி அணியில் விளையாட வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத் தலைவா் டி. நீலகண்டன், செயலா் வேங்கடசுப்பு, ஆகியோா் தெரிவித்திருப்பது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் டிச. 31 ஆம் தேதி நடைபெறும் 68 ஆவது சீனியா் மகளிா் கபடி சாம்பியன் போட்டிகளில் விளையாடும் திருச்சி மாவட்ட அணிக்கான தோ்வில் பங்கேற்க விரும்புவோா் காலை 8 மணிக்குள் வர வேண்டும். 75 கிலோவுக்கு கீழ் இருப்போா் ஆதாா் அட்டை நகலுடன் பங்கேற்கலாம். காலை 8 மணிக்கு பின்னா் வருவோா் தோ்வில் பங்கேற்க இயலாது.