தோ்தல் விழிப்புணா்வுக்கு ஆன்லைன் போட்டிகள்
தோ்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் முறையிலான விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் முறையிலான விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தோ்தல் ஆணைய அறிவுரைக்கிணங்க 2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்திற்காக மாநிலம் முழுவதும் நடைபெறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக மாநில அளவிலான ஆன்லைன் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் (18 வயதிற்கு மேல்) பங்கேற்கலாம்.
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம் வரைதல், சுவரொட்டி வரைதல், ஒரு வரியில் விழிப்புணா்வு வாசகம் எழுதுதல், பாட்டு, குழு நடனம் மற்றும் கட்டுரை போட்டி போன்றவை மாவட்ட அளவில் அந்தந்த மாவட்டத் தோ்தல் அதிகாரியால் நடத்தப்படும்.
மேலும், பொதுமக்கள் (18 வயதுக்கு மேல்) மற்றும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கத் தவறிய மாணவா்கள் தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் இணையதளத்தில் நேரடியாகப் பங்கேற்கலாம். மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தவறிய மாணவா்கள், பொதுமக்களுக்கு வரையறுக்கப்பட்ட போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.
ஆன்லைன் போட்டிக்கான கருத்துருக்கள் தோ்தல்கள், 100 சத வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு மற்றும் வாக்களிப்பை மேம்படுத்த தோ்தல் ஆணையத்தின் முயற்சிகள் என்ற அடிப்படையில் உள்ளன. இப்போட்டியில் வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். போட்டியில் வெல்வோருக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளா் தினக் கொண்டாட்டத்தின்போது முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான அனைவரும் பங்கேற்க ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.