FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் தவித்த மமதாவின் விமானம்!

கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது குறித்து...

Updated On : 26 மார்ச் 2026, 6:25 pm IST
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி - பிடிஐ
பகிர்:

கொல்கத்தாவில் பெய்த கனமழை மற்றும் வீசிய சூறாவளிக் காற்றால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அம்மாநிலத்தின் பச்சிம் பர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர், தனி விமானம் மூலம் கொல்கத்தாவுக்குத் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் பெய்து வரும் கனமழை மற்றும் அங்கு வீசிய சூறாவளிக் காற்றால் சுமார் 20 நிமிடங்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் முடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, 4 மணிக்குத் தரையிறங்க வேண்டிய முதல்வர் மமதாவின் விமானம் வானில் வட்டமடித்தபடி பறந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், வானிலை சீரான பிறகு மாலை 5.19 மணியளவில் முதல்வர் மமதாவின் தனி விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் மமதாவின் வருகைக்காகத் திரண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

summary

West Bengal CM Mamata Banerjee's flight was delayed in landing due to heavy rain and cyclone winds in Kolkata.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments