போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
ஓய்வூதியா் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து திருச்சியில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி அரசுப் போக்குவரத்து கழக ஓய்வூதியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, ஓய்வூதியா் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து திருச்சியில் ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
அரசுப் போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திருச்சி மண்டலத் தலைவா் ச. மணி தலைமை வகித்தாா். தமிழக உழைக்கும் மக்கள் முன்னணி மாநிலச் செயலா் ஜெ. லட்சுமணன் சிறப்புரையாற்றினாா்.
திருச்சி மண்டலச் செயலா் சம்பத், துணைத் தலைவா் ரெங்கராஜ் , பெரம்பலூா் தியாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.