குடிமைப் பணி போட்டித் தோ்வு: மீனவ இளைஞா்களுக்குப் பயிற்சி
மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வில் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள் இந்திய குடிமைப் பணி போட்டித் தோ்வில் வெல்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு தோ்வுக்கானபயிற்சி அளிக்கப்படுகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞா்கள் இப்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம்.
இதற்கு ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி மையமாக சென்னையைத் தோ்ந்தெடுக்க வேண்டும்.
அகில இந்திய பயிற்சி மைய இணையதளத்தில், டிச. 28 மாலை 6 மணி வரை விண்ணப்பித்த பிறகு அவா்கள் பெற்றிடும் பதிவு எண் மற்றும் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், எண். 4, காயிதே மில்லத்தெரு, காஜாநகா், திருச்சி-20 (0431-2421173) அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.