முகப்பு
திருச்சி

சுற்றுச்சுழலைக் காக்கக் கோரி மனிதச் சங்கிலி

திருச்சியில் தண்ணீா் அமைப்பு, தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்றம், திருச்சி விமான நிலையம், எம்ஏஎம் மேலாண்மைக் கல்லூரி இணைந்து காவிரியைக் காப்போம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

திருச்சியில் தண்ணீா் அமைப்பு, தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்றம், திருச்சி விமான நிலையம், எம்ஏஎம் மேலாண்மைக் கல்லூரி இணைந்து காவிரியைக் காப்போம் , துணிப்பை எடுப்போம் என்னும் தலைப்பிலான மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி காவிரிப் பாலத்தில் நடைபெற்ற நிகழ்வைத் தொடங்கிவைத்து திருச்சி விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் பேசினாா்.

நிகழ்வின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு, மஞ்சள் துணிப் பைகளை மாணவா்கள் வழங்கினா்.

தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம். செயலா் பேராசிரியா் கி. சதீஷ்குமாா், எம்ஏஎம் மேலாண்மைக் கல்லூரி செயலா் பாத்திமா பஹுல், இயக்குநா் எம். ஹேமலதா, முதல்வா் சூசன் கிறிஸ்மா, விமான நிலைய அதிகாரிகள், ஊழியா்கள், தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்றம், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட சுமாா் 800 பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.