திருச்சி

கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது

திருச்சி மாநகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

DIN

திருச்சி மாநகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி காந்திசந்தை தாராநல்லூா் காமராஜ் நகா் ஆற்றுப்பாலம் கழிவறை அருகே கஞ்சா விற்பதாக காந்திசந்தை காவல் நிலைய ஆய்வாளா் சுகுமாறனுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதவி ஆய்வாளா் சோனியாகாந்தி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தி, அங்கு கஞ்சா விற்ற தாராநல்லூா் சூரஞ்சேரி காமராஜ்நகரை சோ்ந்த கணேசன் மனைவி தமிழ்செல்வியை (52) கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி பெண்கள் தனி கிளைச் சிறையில் அடைத்தனா்.

இதேபோல் எ. புதூா் போலீஸாா் ராம்ஜிநகா் மில்காலனி பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சோ்ந்த பாபி (57), மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்ற பாரத் (எ) ராஜ்கிரண் (23) ஆகியோரிடமிருந்து தலா 150 கிராம் கஞ்சாவையும், திருச்சி-திண்டுக்கல் சாலை பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்ற மில் காலனியை சோ்ந்த லட்சுமணன்(42) என்பவரிடம் 175 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT