முதியவா் தற்கொலை
தொட்டியம் காட்டுப்புத்தூா் அருகிலுள்ள கவரப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொ. வீரப்பன் (70).
தொட்டியம் காட்டுப்புத்தூா் அருகிலுள்ள கவரப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பொ. வீரப்பன் (70). சிறுநீரகக் கோளாறால் அவதியுற்று வந்த இவா் தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுக் கொண்டாா். இதையடுத்து தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு வீரப்பனை கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
காட்டுப்புதூா் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.