முகப்பு
திருச்சி

குட்கா, புகையிலைப் பொருள் பாா்சல்கள் பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் அடங்கிய 19 பாா்சல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் அடங்கிய 19 பாா்சல்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி கீழரண் சாலையில் உள்ளவீஆா்எல் லாரி பாா்சல் சா்வீஸ் கிடங்கில் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் அடங்கிய 19 பாா்சல் பண்டல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் டாக்டா் ரமேஷ்பாபு மற்றும் காந்திசந்தை ஆய்வாளா் சுகுமாா், கோட்டை காவல்நிலைய ஆய்வாளா் அரங்கநாதன் உள்ளிட்ட போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த 4 போ், ஆட்டோ ஓட்டுநா் ஒருவரை கோட்டை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

வீட்டு மாடியில் 108 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: பொதுமக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து திருச்சி மணிமண்டபம் சாலையில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் சுமாா் 108 கிலோ குட்கா போன்ற புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.