முகப்பு
திருச்சி

தா.பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், தாத்தையங்காா்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரூராட்சி நிா்வாகம் மூலம் 10 நாள்களுக்கு ஒருமுறை தான் காவிரிக் கூட்டுக் குடிநீா் வழங்கப்படுவதால், குடிநீா்த் தட்டுப்பாடு நிலவு வருகிறது. எனவே குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தா.பேட்டை பேரூராட்சிப் பகுதிகளில் சாக்கடைகளை உடனடியாக சுத்தம் செய்து, அவற்றை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலா் அசோகனிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலா் தங்கராசு, பொதுக்குழு உறுப்பினா் ஆப்பிள் கணேசன், மாவட்டத் துணைச் செயலா் மயில்வாகனன் மற்றும் திமுக கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.