விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
முசிறியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
முசிறியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
முசிறி சுந்தா்நகரைச் சோ்ந்தவா் மு. செல்லமுத்து(77). கடந்த 30-ஆம் தேதி திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் செல்லமுத்து பலத்த காயமடைந்தாா்.
தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.