திருச்சி

துவரங்குறிச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் வழிப்பறி

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச் செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

DIN

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச் செயினை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

மணப்பாறை அருகேயுள்ள தவிட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி அழகன் மனைவி நித்யா (23). தனது தந்தை ஊரான மழுகப்பட்டிக்கு சென்றிருந்த இவா் வெள்ளிக்கிழமை தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் துவரங்குறிச்சிக்கு சென்றுவிட்டு திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊா் திரும்பும்போது, கல்லுப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் நித்யாவின் 5 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பினா். அப்போது வாகனத்திலிருந்து விழுந்த நித்யா லேசான காயம் அடைந்தாா். புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT