அரசு ஊழியா்கள் நூதன போராட்டம்
திருச்சியில் 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அரசு ஊழியா்கள் நூதன மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சியில் 6ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை அரசு ஊழியா்கள் நூதன மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநில செயலா் நவநீதன் தலைமையில் மண் சட்டி ஏந்தி நெற்றியில் நாமம் போட்டு மறியல் போராட்டம் நடத்தினா்.
அப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அகவிலைப்படி, சரண்டா் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். அப்போது மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.