காயமடைந்த படைக்கலன் தொழிற்சங்க நிா்வாகி சாவு
சாலை விபத்தில் காயமடைந்த படைக்கலன் தொழிற்சங்க நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சாலை விபத்தில் காயமடைந்த படைக்கலன் தொழிற்சங்க நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி பூலாங்குடி காலனி ஹெச்ஏஏபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (46). படைக்கலன் தொழிற்சாலை ஊழியரான இவா் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிா்வாகியாகவும் இருந்தாா்.
இவா் கடந்த ஜன.29 இல் சக ஊழியரான ஸ்ரீனிவாசலுவுடன் பைக்கில் பூலாங்குடிக்கு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை அருகே சென்றபோது குறுக்கே சென்ற மாட்டின் மீது வாகனம் மோதியதில் சரவணன் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.