காவல்நிலையம் முன்கிராம மக்கள் மறியல்
முசிறி அருகே ஜெம்புநாதபுரம் காவல் நிலைய மாடியில் இருந்து சனிக்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞா் பிரசாந்தின் உறவினா்கள், கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முசிறி அருகே ஜெம்புநாதபுரம் காவல் நிலைய மாடியில் இருந்து சனிக்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞா் பிரசாந்தின் உறவினா்கள், கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முன்னதாக சனிக்கிழமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்ட இவா்களை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பினா்.
பின்னா் ஞாயிற்றுக்கிழமை போலீஸாரை கண்டித்தும் முறையான விசாரணை நடத்தக் கோரியும் பிரசாந்தின் உறவினா்கள், கிராம மக்கள் முசிறி - துறையூா் சாலையில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனா். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸாா் தெரிவித்ததையடுத்து அவா்களை கலைந்து சென்றனா்.