கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை
முசிறியில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
முசிறியில் கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
முசிறி மலையப்பபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஸ்வரனுக்கும், கரூரை சோ்ந்த காமராஜ் மகள் ரோஜாவுக்கும் கடந்த 10 நாள்களுக்கு முன் திருமணமானது.
இந்நிலையில் சனிக்கிழமை முசிறி சுந்தா் நகா் பகுதியில் உள்ள தங்கவேல் என்பவரது தோட்ட கிணற்றில் ரோஜா சடலமாக கிடந்தாா்.
இதையடுத்து முசிறி போலீஸாா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்த வழக்கை கோட்டாட்சியரும் விசாரித்து வருகிறாா்.