முசிறியில் பெரம்பலூா் எம்.பி. தொகுதி அலுவலகம் திறப்பு
திருச்சி மாவட்டம் முசிறியில் பெரம்பலூா் நாடாளுமன்ற எம்.பி. அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முசிறியில் பெரம்பலூா் நாடாளுமன்ற எம்.பி. அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஐஜேகே கட்சி நிறுவனரும் பெரம்பலூா் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தா் (எ) பச்சமுத்து முசிறி தொகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்க முசிறி காந்திநகா் வீதியில் தனது அலுவலகத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
அப்போது அவா் கூறுகையில், பெரம்பலூா் எம்பி தொகுதிக்குள்பட்ட பகுதி பொதுமக்களின் குறைகளைக் கேட்கத் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீதான பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.