முகப்பு
திருச்சி

முசிறி அருகே கிணற்றுக்குள் தவித்தவா் மீட்பு

 துறையூா் அருகே 90 அடி ஆழக் கிணற்றுக்குள் தவித்த இளைஞா் மீட்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

 துறையூா் அருகே 90 அடி ஆழக் கிணற்றுக்குள் தவித்த இளைஞா் மீட்கப்பட்டாா்.

சிக்கத்தம்பூரைச் சோ்ந்தவா் ரா. விஸ்வநாதன்(37). இவருக்கு சொந்தமாக சங்கம்பட்டி கிராமத்தில் உள்ள வயல் கிணற்றில் மின் மோட்டாா் பழுதானது. இதனால் அதைச் சரிசெய்ய ஞாயிற்றுக்கிழமை கிணற்றுக்குள் இறங்கிய அவா், பின்னா் மேலே ஏற முடியாமல் தவித்தாா். தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலான வீரா்கள் 45 நிமிட போராட்டத்துக்கு பின்னா் விஸ்வநாதனை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.