திருச்சி

அங்கன்வாடி ஊழியா்கள் 3ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3ஆவது நாளாக அங்கன்வாடி ஊழியா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

அங்கன்வாடி ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வி தலைமையில் திங்கள்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக 3ஆவது நாளாக புதன்கிழமை பழைய ஆட்சியரக சாலையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலா் சித்ரா, பொருளாளா் ராணி ஆகியோா் கண்டன உரையாற்றினா். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராவிட்டால் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT