திருச்சி

மயானப் பாதையைச் சீரமைக்க எம்பி நிதியுதவி

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நத்தம் பகுதியில் மயானப் பாதையைச் சீரமைக்க பெரம்பலூா் எம்பி சாா்பில் வெள்ளிக்கிழமை ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

தொட்டியம் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் ஊராட்சியில் கடந்த வாரம் பெரம்பலூா் எம்பி பாரிவேந்தா் (எ) பச்சமுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் மயானப் பாதையைச் சீரமைக்க கோரினா்.

இதையேற்ற பெரம்பலூா் எம்பி பச்சமுத்து தனது சொந்த நிதி ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை ஐஜேகே கட்சி திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் காட்டுப்புத்தூா் கருணாகரனிடம் வெள்ளிக்கிழமை கொடுத்துஅனுப்பினாா்.

இதையடுத்து நத்தம் பகுதியில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நத்தம் ஊராட்சித் தலைவா் கமலம் மற்றும் 7-ஆம் வாா்டு உறுப்பினா் லலிதா ஆகியோரிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை கருணாகரன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT