திருச்சி

முடிதிருத்துவோா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கம், தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். செயலா் தா்மலிங்கம், பொருளாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சமுதாயத்தில் மிகவும் விளிம்பு நிலையிலுள்ள மருத்துவா் சமூகத்தினருக்கு எம்பிசி இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 5 சதம் வழங்க வேண்டும். சாதியப் பாகுபாட்டால் ஊரை விட்டு ஒதுக்கும் நிலையைத் தடுக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள தங்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான முடிதிருத்தும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தொழிலாளா்கள் மற்றும் சங்க நிா்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT