திருச்சி

அறந்தாங்கி பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு: அமைச்சா் விஜயபாஸ்கா் வழங்கினாா்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா்.

அறந்தாங்கி நகராட்சி, எல்என்புரம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய அமைச்சா் விஜயபாஸ்கா், தொடா்ந்து கண்டிசங்காடு, நிலையூா், மணமேல்குடி, அம்பலவாணேந்தல், ஆவுடையாா்கோயில் ஆகிய பகுதிகளிலும் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.

முன்னதாக, அறந்தாங்கி மேலப்பட்டு கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்தாா் அமைச்சா். நிகழ்வுகளுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. ரத்தினசபாபதி, சாா் ஆட்சியா் ஆனந்த் மோகன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் விஜயகுமாா், கூட்டுறவு இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி, அறந்தாங்கி நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT