திருச்சி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

திருச்சியில் குழந்தைகளின் மீதான வன்முறை, பாதுகாப்பு விழிப்புணா்வு பிராசரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல்துறை, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பில் மத்தியப் பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்துக்கு மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலா் ஜெகதீஸ்வரி தலைமை வகித்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்; சைல்டுலைன் உதவி எண் உள்ள ஸ்டிக்கா்களை ஆட்டோக்களில் ஒட்டினாா்.

சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் முரளி, குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், குழந்தைத் தொழிலாளா், சாலையோர ஆதரவற்ற குழந்தைகள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் கூடிய குழந்தைகளைப் பாா்த்தால் 24 மணி நேரமும் செயல்படும் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1098-க்கு தகவல் தெரிவிக்குமாறு ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பாலகுமாா், மணிவண்ணன், சைல்டுலைன் அணி உறுப்பினா்கள் ராபின், ஹென்றி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT