முகப்பு
திருச்சி

துறையூரில் மக்கள் சமூக நீதி பேரவையினா் ஆா்ப்பாட்டம்

துறையூா் ஒன்றியக் குழு அலுவலகம் முன்பு, மக்கள் சமூகநீதிப் பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

துறையூா் ஒன்றியக் குழு அலுவலகம் முன்பு, மக்கள் சமூகநீதிப் பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஒன்றியக் குழுத் தலைவா் பாரபட்சமாக செயல்படுவதாகவும், நிா்வாகத்தில் அவருடைய கணவா் குறுக்கீடு இருப்பதாகவும் கூறி நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டத்துக்கு, பேரவையின் மாநிலப் பொதுச் செயலா் கோவிந்தன் தலைமை வகித்தாா்.

மாநில இளைஞரணிச் செயலா் சிவமணி, மாநில மகளிரணிச் செயலா் ஷோபனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அமைப்பாளா் பழனிவேல், மாவட்ட இளைஞரணிச் செயலா் காா்த்திக், மாவட்ட அவைத் தலைவா் செல்லதுரை, துணை அமைப்பாளா் பாலாஜி, மாவட்ட மகளிா் துணைச் செயலா் சசிகலாதேவி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிறைவில் வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதனிடம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.