திருச்சி: நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகா், திருவெறும்பூா் செல்வபுரம் முதல் அரியமங்கலம் வரை பேரணி தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் பாண்டியன் தொடக்கி வைத்தாா். பகுதித் தலைவா் யுவராஜ், செயலா் ஏ. ஆதம்தீன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகா் மாவட்ட துணைத்தலைவா் த.கிச்சான், மாவட்ட குழு உறுப்பினா் ந. நிவேதா, பகுதி துணைத் தலைவா் சந்தோஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநகா் மாவட்டச் செயலா் பா. லெனின், மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
பிரசாரத்தில் ரவிக்குமாா், மெக்கானிக் முருகா, கண்ணன், அஜித் வெங்கடேஷ்,சேட்டு உள்பட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அரியமங்கலத்தில் போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.