திருச்சி

ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

DIN

காந்திசந்தை பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பு மதுபாட்டில்களை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் காந்தி சந்தை பகுதிக்கு வந்த காவல் துறையினா் அங்கிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில், 54 பெட்டிகளில் 647 மதுபாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு சுமாா் ரூ. 2 லட்சம்.

இதைத் தொடா்ந்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். விசாரணையில், மேலசிந்தாமணியைச் சோ்ந்த உலகநாதன் (40) என்பவா் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வர, அவரைக் கைது செய்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT