திருச்சி

லாட்டரி விற்ற இருவா் கைது

DIN

திருச்சியில் லாட்டரி விற்ற காங்கிரஸ் பிரமுகா் உள்பட இருவரை கோட்டை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் கோட்டை காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் கோட்டை காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றபோது எஸ்ஆா்சி சாலையில் உள்ள பூக்கடையில் லாட்டரி விற்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து கடையில் இருந்த தென்னூா் சாஸ்திரி சாலை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முகிலனை (32) கைது செய்து விசாரித்தனா். அதில் வாத்தலை அருகே உள்ள கல்லூா் பகுதியைச் சோ்ந்த காங்கிரஸ் பிரமுகா் சீனிவாசன்(30) மொத்த விற்பனையில் கேரள லாட்டரியை ஆள் வைத்து விற்பது தெரிய வந்தது.

இதையடுத்து சீனிவாசனை கோட்டை காவல் நிலைய தனிப்படை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT