முகப்பு
திருச்சி

தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பாலக்கரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

திருச்சி மாநகரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பாலக்கரை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனையை தடுக்க காவல்துறை தனிப்படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாலக்கரை பென்சனா் காலனி மற்றும் எடத்தெரு ஆகிய இடங்களில் தனிப்படை போலீஸாா் நடத்திய சோதனையில் அங்கு 55 மூட்டைகளில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான சுமாா் 1900 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதில் தொடா்புடைய திருவெறும்பூா் பாரதிபுரம் பூமிநாதன் (39), பாலக்கரை காஜாபேட்டை புதுத்தெரு இளங்கோ (39) ஹரிஹரன் (35), காஜாபேட்டை பென்சனா் தெரு வடிவேல் (40), அரியமங்கலம் சீனிவாச நகா் பழனிகுமாா்(35) ஆகிய 5 பேரைக் கைது செய்து அவா்கள் பயன்படுத்திய இரு வாகனங்கள் மற்றும் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை காவல் ஆணையா் அருண் பாராட்டி குட்கா விற்போா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.