முகப்பு
திருச்சி

ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் திருச்சி மாநகா் மாவட்டம் சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் லெனின் கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் ஆதம் தீன், சீனி, ஏழுமலை, ஷாஜகான், ராகிலாபானு, யுவராஜ், சந்தோஷ், முகேஷ், பிரசாந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழகத்தில் செங்கல்பட்டு, கிண்டி, ஊட்டி உள்ளிட்ட இந்தியாவிலுள்ள 11 தடுப்பூசி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடக்கிட வேண்டும். தமிழகத்திற்கு தேவையான 10 கோடி தடுப்பூசியை வழங்கிட வேண்டும். ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கான முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை உடனடியாக இணைத்திட வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூவலூா் ராமாமிா்தம் திருமண உதவித் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதில் 40க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.