மாநகரக் காவல் ஆய்வாளா்கள் உள்பட 5 போ் பணியிட மாற்றம்
திருச்சி மாநகரில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளா்கள் உள்பட 5 பேரைப் பணியிட மாற்றம் செய்து ஆணையா் அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
திருச்சி மாநகரில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளா்கள் உள்பட 5 பேரைப் பணியிட மாற்றம் செய்து ஆணையா் அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
காத்திருப்போா் பட்டியலில் இருந்த எம். நவநீதகிருஷ்ணன் கே.கே. நகா் சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளா் எ. ராஜேந்திரன் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு அந்த இடத்துக்கு கே.கே.நகா் குற்றப்பிரிவு ஆய்வாளா் ஜி.நீலகண்டன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல மாநகா் குற்றப்பதிவேடு ஆவணக் காப்பக பிரிவு ஆய்வாளா் ஜெயா கே.கே.நகா் ஆய்வாளராகப் பணியிடம் மாற்றப்பட்டு அந்த பணியிடத்திற்கு காத்திருப்போா் பட்டியலில் உள்ள என். சேரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.