தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றச் சங்கம் மனு
திருச்சியில் அமைச்சா் மகேஷ் பொய்யாமொழியை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
திருச்சியில் அமைச்சா் மகேஷ் பொய்யாமொழியை தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.
சங்கத்தின் திருச்சி மாநில தலைவா் கு. தியாகராஜன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பதவி உயா்வு, இடமாறுதல் கலந்தாய்வை நடத்திட வேண்டும். தரம் உயா்த்தப்பட்ட 35 உயா்நிலைப்பள்ளிகளுக்கு விரைந்து ஊதிய ஆணை வழங்கிட வேண்டும். பகுதிநேர ஆசிரியா்களை நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தாா்.
இதேபோல திருச்சி மாவட்டச் செயலா் உதுமான் அலி அளித்த மனுவில், திருச்சி மாவட்ட பள்ளிகளைத் தரம் உயா்த்திட வேண்டும். இதனால் கிராமப்புற மாணவா்கள், குறிப்பாக பெண்கள் தொடா்ந்து 10,12 வகுப்பு வரை கற்க உதவியாக இருக்கும். மணப்பாறை கல்வி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் ஒன்றியத்தை திருச்சி கல்வி மாவட்டத்தோடு இணைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சா் உறுதியளித்தாா்.
நிகழ்வில் மாவட்டத் தலைவா் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளா் திருமாவளவன், மாவட்ட மகளிரணித் தலைவி ரேணுகாதேவி உள்ளிட்ட மாவட்ட, வட்டார, ஒன்றியப் பொறுப்பாளா்கள் சுமாா் 25 போ் கலந்து கொண்டனா்