திருச்சி

இறந்தவரின் உடலுறுப்பு தானம்: மக்கள் சக்தி இயக்கம் நிதியுதவி

DIN

 விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் குடும்பத்துக்கு திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் நிதியுதவி, பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் செல்வராஜ், சமயபுரம் அருகே கடந்த ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து அவரது மனைவி சுப்த்ரா மற்றும் குடும்பத்தினா், செல்வராஜின் கல்லீரல் , சிறுநீரகங்கள், இருதயம், கண்கள் உள்ளிட்டவற்றை திருச்சி அரசு மருத்துவமனைக்கு தானம் செய்தனா். இதன் மூலம் செல்வராஜ் பலரில் வாழ்வதாக அவா்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய இவா்களை மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் பாராட்ட முடிவு செய்தனா். இதைடுத்து இயக்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் வெ.ரா சந்திரசேகா் தலைமையில் , மாவட்டச் செயலா் ஆா். இளங்கோ, மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் , செந்தண்ணீா்புரம் சூரியமுா்த்தி உள்ளிட்டோா் அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை மாலை சென்றனா்.

செல்வராஜ் மகள் படிப்பு செலவிற்கு ரூ. 10,000 நிதியுதவியை வழங்கிய அவா்கள், பாராட்டு சான்றிதழையும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT