திருச்சி

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை முறைப்படுத்த வலியுறுத்தல்

DIN

தமிழக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க சீா்மரபினா் நலச்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சீா்மரபினா் நலச்சங்க ஆலோசகா் பன்னீா் செல்வம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: நாட்டில் பல சமூகங்கள் இணக்கமாக வாழ்ந்து வரும் நிலையில், குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு கோரிக்கை சமூக நல்லிணக்கத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி இட ஒதுக்கீடு சாத்தியமில்லாதது. தனது சமூகத்தினருக்கு மட்டுமே போராட்டங்களை நடத்தி வரும் பாமக நிறுவனா் ராமதாஸ் அனைத்து மக்களுக்கான சமூக நீதிக்கான எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்தது இல்லை. எனவே, சமூக நீதியை முழுவதுமாக புரிந்துகொண்ட திமுக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அவா்களுடைய கல்வி சமூக நிலை குறித்து விவரங்கள் சேகரித்து, அனைத்து மக்களுக்கும் முறையான பங்களிப்பு, வாய்ப்பு, பிரதிநிதித்துவம் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT